தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டையிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்து, ரயிலில் இருக்கைக்காக பயணிகளிடையே சண்டை நடப்பதை எத்தனையோ முறை பார்த்திருக்கிறோம். ஆனால், விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் அடி, தடி நடத்திய விவகாரம் தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானில் இருந்து கலிபோர்னியா செல்லும் ஈ.வி.ஏ விமானத்தில் இருக்கைக்காக இரண்டு பயணிகள் சண்டை போட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. விமானத்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம் எடுத்து இதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
விமானத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்தார். இதனால், அவர் அருகே அமர்ந்திருந்த பயணி, காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார். இதனால். இருமிய பயணி, எழுந்து சென்ற பயணி இருக்கை அருகே சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்கள் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.
அவர்களின் சண்டையை விலக்கி விட விமான ஊழியர்கள் போராடினர். அதற்காக பயணிகள் இருவரையும் பிடித்து சண்டையை நிறுத்த எவ்வளவோ முயன்றனர். மறுபுறம், இருவருக்கும் இடையே நடந்த சண்டையைப் பார்த்து மற்ற பயணிகள் பீதியடைந்து அலறுவதை வீடியோவில் காணலாம். இறுதியாக, இருவரையும் சமாதானம் செய்து ஊழியர்கள் சோர்வடைந்தனர். விமானம் சான்பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியதும் இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ 34,000 பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் விமான ஊழியர்களின் பொறுமை மற்றும் கடமை உணர்வை நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர். அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளாரா? அவர்கள் மீது என்ன சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் எக்ஸ் தளத்தில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!
கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!
ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!
எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!
ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!