மியான்மரின் இராணுவ அரசாங்கம் 114 வெளிநாட்டவர்கள் உட்பட 9,652 கைதிகளை நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவுள்ளது.
பிப்ரவரி 2021ல் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர் கொந்தளிப்பில் உள்ளது. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுத குழுக்கள் போரில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய எல்லையில் உள்ள மியான்மர் பகுதிகளை இந்த ஆயுதக் குழுக்கள் கைப்பற்றி வருகின்றனர். இதனையடுத்து மியான்மர் ராணுவ வீரர்கள் இந்திய பகுதிக்குள் நுழைந்து இந்திய பாதுகாப்பு படையினரிடம் தஞ்சம் அடைவது தொடருகிறது.
இந்நிலையில், மியான்மர் சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து 9,700க்கும் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ராணுவ கவுன்சில் அறிவித்துள்ளது. பல்வேறு சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களில் உள்ள 9,652 கைதிகள் மன்னிக்கப்படுவார்கள் என்றும் 114 வெளிநாட்டு கைதிகள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வர்த்தக தலைநகரான யாங்கூனில், கைதிகள் விடுவிக்கப்படுவதற்காக இன்சைன் சிறைச்சாலைக்கு வெளியே மக்கள் குழுக்கள் கூடியுள்ளனர்.
பரோல் செய்யப்பட்ட கைதிகள், 'இன்னொரு குற்றம் செய்தால், அந்த தண்டனையுடன் சேர்த்து மீதமுள்ள தண்டனையை தொடர்ந்து அனுபவிப்பார்கள்' என்ற உறுதிமொழியின் பேரில் விடுவிக்கப்பட்டனர். அரசியல் கைதிகள் யாரேனும் விடுதலை செய்யப்படுவார்களா என்பது இன்னும் தெரியவில்லை. சிறையில் இப்போதும் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூ கியும் ஒருவர்.
2021ல் இராணுவம் ஆட்சியை கையகப்படுத்தப்பட்டதிலிருந்து 25,000 க்கும் மேற்பட்ட கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 5,800 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!
கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!
தமிழகத்தில் மதுவால் கொலை அதிகரிக்கிறது... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!