அமெரிக்காவில் ஒரே நாளில் 4,61,729 பேர்பாதிப்பு!- உலக அச்சுறுத்தும் கரோனா

கரோனா பரிசோதனை
கரோனா பரிசோதனைhindu கோப்பு படம்

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது. அமெரிக்காவில் ஒரே நாளில் 4,61,729 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உருமாறி வரும் கரோனா நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிப்பின் வீரியம் சற்று தணிந்தாலும் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 36.64 கோடியாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 56.65 லட்சமாக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 28.97 கோடியாக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 7.14 கோடியாக உள்ளது. இதில் தீவிர பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 96,059 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 4,61,729 பேரும், பிரான்சில் 3,92,168 பேரும், இந்தியாவில் 2,48,697 பேரும், பிரேசிலில் 2,28,972 பேரும், இங்கிலாந்து 96,871 பேரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in