இலங்கையில் இருந்து நள்ளிரவில் தனுஷ்கோடி வந்த 4 பேர்

தனுஷ்கோடி வந்த குடும்பம்
தனுஷ்கோடி வந்த குடும்பம்இலங்கையில் இருந்து நள்ளிரவில் தனுஷ்கோடி வந்த 4 பேர்

இலங்கையைச் சேர்ந்த தம்பதி தங்களது 2 குழந்தைகளுடன் நள்ளிரவில் தனுஷ்கோடிக்கு படகில் வந்தனர்.

இலங்கையில் கடந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவு பண்டங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இதனால் அங்கு வாழ வழியின்றி அகதிகளாக பலர் தமிழகம் வந்த உள்ளனர். கடந்த 2022 மார்ச் 22-ம் தேதி முதல் இலங்கை தமிழர்கள் அகதிகளாக வரத்துவங்கினர்.

இந்நிலையில், இலங்கை யாழ்ப்பாணம் பெருங்காடு புங்குடு தீவு பகுதியைச் சேர்ந்த ஜெய பரமேஸ்வரன் (43), இவரது மனைவி வேலு மாலினி (43), இவர்களது மகள் தமிழினி (12), மகன் மாதவன் (7) ஆகியோர் தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரம் அருகே ஒத்தப்பட்டி தென் கடற்பகுதிக்கு நேற்று இரவு வந்தனர்.

அவர்களிடம் தனுஷ்கோடி போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது: இலங்கை பணம் 2 லட்சம் மற்றும் 100 லிட்டர் மண்ணெண்ணெய் கொடுத்து படகு மூலம் நேற்று மாலை 6 மணிக்கு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் இருந்து கிளம்பி நேற்றிரவு தனுஷ்கோடி வந்தோம் என்றனர்.

இதையடுத்து மண்டபம் அழைத்து வரப்பட்ட அந்த 4 பேரும் மண்டபம் முகாமில் உள்ள தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பின் தமிழகம் வந்துள்ள இலங்கை தமிழர்களின் வருகை எண்ணிக்கை தற்போது 221 ஆக உயர்ந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in