ஒரேயடியாய் ஒதுங்கிய சின்ராஜ்!

சின்ராஜ்
சின்ராஜ்

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் எம்பி-யான ஏ.கே.பி. சின்ராஜ், அதிமுக ஆட்சியில் நகராட்சி அலுவலகங்களில் ஆய்வு செய்வது, அரசுக்கு எதிரான விமர்சனங்களை எடுத்து வைப்பது, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என எந்நாளும் ஆர்ப்பாட்டமாக இருப்பார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆய்வுகளை தவிர்த்து அரசு நிகழ்ச்சிகளில் மட்டும் தலைக் காட்டினார். இப்போது அதுவும் இல்லை. காரணம், திமுகவுக்கு புதிதாக ராஜ்யசபா எம்பியாக தேர்வாகி இருக்கும் ராஜேஸ்குமார் என்கிறார்கள். இவர் எம்பி ஆனதும் சின்ராஜுக்கு முக்கியத்துவத்தை குறைத்துவிட்டார்களாம் அதிகாரிகள். அரசு நிகழ்ச்சிகளில் சம்பிரதாயத்துக்குத்தான் தனது பெயரைப் போடுகிறார்கள் என்று புரிந்து கொண்ட சின்ராஜ், தொகுதியில் இருந்தாலுமே பல நேரங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் நாசூக்காக தவிர்த்துவிடுகிறாராம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in