உற்சாக மோடில் வெல்லமண்டி!

வெல்லமண்டி நடராஜன்
வெல்லமண்டி நடராஜன்

பெரும்பகுதியான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஈபிஎஸ் ஆதரவு நிலை எடுத்தபோது, திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கம் நின்றார். அதற்காக அவரை அப்போது பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு, தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்றுகூட கவலைப்பட்டுப்போனார் வெல்லமண்டி. இந்த நிலையில், ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் மீண்டும் உற்சாக மோடுக்கு மாறி இருக்கிறார். அந்த உற்சாகத்தில், முன்பு தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு தானே போன்போட்டு, “நான் எடுத்த முடிவு சரின்னு நிரூபணம் ஆகிருச்சு பாத்தீங்களா?” என்று வாயைக் கிளறுகிறாராம். தீர்ப்புக்கு முதல் நாளே தனது ஆதரவாளர் களுக்குப் போன் போட்டுப் பேசிய வெல்லமண்டி, “நிச்சயம் தீர்ப்பு நமக்குச் சாதகமாத்தான் வரும். அதனால நாளைக்கு காலையில எல்லாரும் நம்ம ஆபீஸுக்கு வந்திருங்க” என்று சொன்னதையும் “இவருக்கு எப்படி அத்தனை உறுதியா தெரிஞ்சுது” என்று வியந்து பேசிக்கொண்டிருக்கிறது அவரது ஆதரவு வட்டம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in