யாருக்காகவும் எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளாதவர் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார். அதனால் ஆளும் கட்சியினரே இவரைக் கொஞ்சம் மிரட்சியோடுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்டவர், புதிதாக தேர்வான மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பின்போது அவரவர் சார்ந்த கட்சிக்கு ஏற்ப புத்தகங்களைத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்தார். திமுகவினருக்கு ‘உங்களில் ஒருவன்’ என்ற ஸ்டாலின் எழுதிய புத்தகத்தையும், அதிமுகவினருக்கு ‘எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்’, ‘வாத்தியார்’, ‘ஜெ.ஜெயலலிதா எனும் நான்’ ஆகிய புத்தகங்களையும், பாஜகவினருக்கு ‘ஊரெல்லாம் சிவமயம்’ என்ற புத்தகத்தையும் பரிசளித்து நான் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் சரவணக்குமார்.