புலம்பும் புத்திர சிகாமணி!

பொன்முடி, (ரவிக்குமார்) கௌதம சிகாமணி
பொன்முடி, (ரவிக்குமார்) கௌதம சிகாமணி

விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக உதித்த பிறகு, (அமைச்சர்) பொன்முடியை இந்த மாவட்ட விவகாரங்களில் தலையிடாமல் இருக்கச் சொல்லுங்கள் என்று கள்ளக்குறிச்சி திமுகவில் பலரும் போர்க்கொடி தூக்கினார்கள். இன்னமும் இந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்களான கார்த்திகேயனும், உதயசூரியனும் தீர்க்கமாக இருக்கிறார்கள். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பை அமைச்சர் எ.வ.வேலு வசம் ஒப்படைத்தது திமுக தலைமை. இதையடுத்து பொன்முடியை அழைக்காமலேயே இந்த மாவட்டத்தில் விழாக்களை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி தொகுதிக்கு எம்பி-யாக இருக்கும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, “அப்பாவுக்கு மரியாதை இல்லாத இந்த மாவட்டத்தில் எனக்கென்ன வேலை?” என்று கேட்கிறாராம். அந்த ஆதங்கத்தில், தனக்கு அழைப்பு இருந்தும்கூட சங்கராபுரம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடக்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளை புறக்கணித்து விடுகிறாராம் சிகாமணி.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in