இறந்து போகலாம் எனக் கருதுகிறேன்!

நெல்லை கண்ணன்
நெல்லை கண்ணன்

மூத்த காங்கிரஸ்காரரான நெல்லை கண்ணனுக்கு தமிழக அரசின் இளங்கோவடிகள் விருதும், பரிசுத்தொகையும் அளித்து கௌரவித்தார் ஸ்டாலின். ஆனாலும், தான் எதிர்பார்த்த முதல்வரின் கடைக்கண் பார்வை மட்டும் கிடைக்கவே இல்லை என்று அண்மையில் தனது முகநூலில் வேதனை ததும்ப புலம்பி பதிவிட்டார் நெல்லை கண்ணன். ‘விருது விழாவில் முதல்வர் காட்டிய தாயுள்ளத்தை உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்...’ என்று துவங்கும் அந்தப் பதிவில், 'இனி நீங்கள் கண்கலங்கி நான் பார்க்கக்கூடாது, நான் உங்களை நன்றாகப் பார்த்துக் கொள்வேன் என்று என் கையை பற்றிக்கொண்டு முதல்வர் சொன்னார். ஆனால் இப்போது ஒரு கடிதத்திற்குகூட விடை இல்லை. நேரில் பேச அனுமதிக்கவில்லை. இதனாலேயே இறந்து போகலாம் எனக் கருதுகிறேன்’ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார் நெல்லை கண்ணன். ஆனால், யார் என்ன சொன்னார்களோ தெரியவில்லை... இப்போது அந்தப் பதிவை நீக்கிவிட்டார். நெல்லை கண்ணன் என்ன தான் எதிர்பார்க்கிறார் என்று புரியாமல் ஆளும்கட்சி வட்டாரம் குழம்பிப்போய் நிற்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in