பொன்முடியின் அடிமை புகழேந்தி பேசுவார்!

கே.என்.நேரு
கே.என்.நேரு

அண்மையில் திருச்சியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. அமைச்சர் பொன்முடியும் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கூட்டத்தில் திருச்சி மாவட்ட திமுக எம்எல்ஏ-க்களை வரிசையாக பேச அழைத்த மாவட்ட அமைச்சர் கே.என்.நேரு, அனைவரையும் ஓரிரு நிமிடங்களுக்குள் பேச்சை முடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் அப்படியே பேசிமுடிக்கவும், "நமக்கு வாய்த்த அடிமைகள் ரொம்ப நல்லவங்க” என்று கலாய்த்த நேரு, "அடுத்து பொன்முடியின் அடிமையான புகழேந்தி எம்எல்ஏ பேசுவார்" என்று சொன்னதைக் கேட்டு மேடையில் இருந்தவர்களின் முகத்தில் ஈயாடவில்லை. சுதாரித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி "நேரு எப்போதுமே இப்படித்தான் பேசுவார். ஆனால், என்னைப் பொறுத்தவரை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லை” என்றதுடன், “அன்புக்கு நான் அடிமை...” என்று எம்ஜிஆர் பாடலைப் பாடி கூட்டத்தை சகஜநிலைக்குத் திருப்பினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in