ஆளுநர் பதவி கேட்டாரா எம்.சி.சம்பத்?

எம்.சி.சம்பத்
எம்.சி.சம்பத்

ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட அதிமுக செயலாளராக முன்பு முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் இருந்தார். அதை நான்காகப் பிரித்து தனக்கான முக்கியத்துவத்தை குறைத்ததில் சம்பத்துக்கு நீண்ட நாட்களாகவே வருத்தம் உண்டு. தற்போது கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தாலும் அதிகம் ஈடுபாடு காட்டாமலே இருக்கிறாராம் சம்பத். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவருக்கு எதிராக ஆளாளுக்கு ஒரு தகவலைப் பரப்புகிறார்களாம். ‘சம்பத்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பத் இரண்டு கோரிக்கைகளை வைத்தார். தனக்கு மாநில அளவில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும். அல்லது புதுச்சேரி மாநிலத்துக்கு துணை ஆளுநராக நியமிக்க வேண்டும். சம்பத்தின் இந்த இரண்டு கோரிக்கைகளைக் கேட்டு பாஜக தூதுவர்கள் திடுக்கிட்டுத் திரும்பிவிட்டார்கள்’. இதுதான் சம்பத் பற்றி கடலூர் மாவட்டத்தில் லேட்டஸ்டாக பரப்பப்படும் செய்தி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in