கலக்கத்தில் மேயர் மகேஷ்!

மேயர் மகேஷ்
மேயர் மகேஷ்

திருவாரூரில் தெருப் பெயருக்கு கருணாநிதியின் பெயர் சூட்டும் விஷயத்தில் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புக் கிளப்பியதால் அதிலிருந்து பின்வாங்கியது திமுக. அடுத்ததாக நாகர்கோவில் திமுக மேயர் மகேஷ் கட்சித் தலைமையை தாஜா செய்வதற்காக, கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்திற்கு ‘கலைஞர் மாளிகை’ என பெயர் சூட்டக் கிளம்பினார். இதற்காக மாநகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றினார். இதைக் கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை நாகர்கோவிலுக்கு வந்து போராட்டம் நடத்தப் போவதாக சிலர் கொளுத்திப் போட்டார்களாம். இதையடுத்து இந்த விவகாரத்திலிருந்தும் பின் வாங்கியிருக்கிறது திமுக. ‘உள்ளாட்சி அமைப்புகள் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி பெயர் மாற்றக்கோருவது தவறு. நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகளின் ஆணையாளர் வழியாக அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்னரே மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்ற முடியும்’ என அரசு தரப்பிலிருந்து அறிக்கை வெளியானதுடன், “எதற்காக இப்படியெல்லாம் செய்கிறீர்கள்?” என்று திமுக தலைமையிலிருந்து மகேஷைக் கடிந்து கொண்டதாகவும் சொல்கிறார்கள். பிள்ளையார் பிடிக்கப்போய் அது குரங்காக மாறிய கதையாய கலங்கிப்போய் உட்கார்ந்திருக்கிறாராம் மகேஷ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in