சசிகலா சிறைமீண்ட பிறகு அமைதியிலும் அமைதி காக்கிறார் அவரது சகோ திவாகரன். முன்பெல்லாம் அவ்வப்போது அரசியல் பேசும் திவாகரன், இப்போது எதற்கும் வாய் திறப்பதில்லை. வீடு, வீட்டை விட்டால் கல்லூரி என சிறு வட்டத்துக்குள் முடங்கி விட்டார். இதுபற்றி யாராவது கேட்டால், “அரசியல் நிலவரங்களை ஒதுங்கியிருந்து கவனித்து வருகிறேன். இப்போதைக்கு ஒரு பார்வையாளனாக மட்டுமே இருப்பேன். சின்னமாவுக்காக சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆண்டவன் புண்ணியத்தில் அந்த வேலைகள் நல்லபடியாக முடியும்வரை இப்படித்தான் இருப்பேன்" என்கிறாராம்.