அண்ணனுக்காக அறிக்கைகள் வாசிப்பது அண்ணாதுரை!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

பத்திரிகைகளுக்கு சளைக்காமல் பேட்டி தரும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இப்போது பத்திரிகையாளர்களைச் சந்திப்பதேயில்லை. அப்படியே சந்தித்தாலும், “சசிகலா பற்றி கேட்கக்கூடாது, ரெய்டு பற்றி கேட்கக்கூடாது” என்று முன்நிபந்தனைகளை விதிக்கிறார். ஆனாலும் அங்கே சுற்றி இங்கே சுற்றி கடைசியில் அதற்கே வருகிறார்களாம் பத்திரிகையாளர்கள். “ஏம்பா, ஏதோ நாங்க நாலு காசோட நல்லாயிருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலியாப்பா?” என்று சொல்லி சில பத்திரிகையாளர்களின் நம்பரையே பிளாக் லிஸ்ட்டில் வைத்துவிட்டாராம் செல்லூரார்.

பேட்டிக்கு ஜகா வாங்கினாலும் அவ்வப்போது செல்லூராரின் அறிக்கைகள் மட்டும் வெளியாகின்றன. அதிலும் முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இவர் விடும் அறிக்கைகள் நச் ரகம். கம்யூனிஸ்ட்களுக்கு எங்கே அடித்தால் வலிக்கும் என்று தெரிந்து எப்படி இவ்வளவு துல்லியத் தாக்குதல் நடத்துகிறார் என்று விசாரித்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அதிமுகவில் அடைக்கலமான முன்னாள் எம்எல்ஏ-வான அண்ணாதுரை தான் இந்த அறிக்கைகளின் பின்னால் இருக்கும் சூத்ரதாரி என்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in