எடப்பாடியாரைப் பதறவைத்த ரெய்டு!

எடப்பாடியாரைப் பதறவைத்த ரெய்டு!

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கூடலூர் அதிமுக முக்கியப் புள்ளியின் வீடு மற்றும் மில்களில் ஒருமாதத்துக்கு முன்பே போலீஸார் சோதனையிட்டு, சில ஆவணங்களைக் கைப்பற்றினார்களாம். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். அவர்களில் பிரதானமான இரண்டு பேர், “நாங்கள் கூலிக்கு ஏவப்பட்ட அம்புகள் தான். எங்களை அப்ரூவராகச் சேர்த்தால் எங்களுக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் சொல்லிவிடுகிறோம்” என்று உளறிவிட்டார்களாம். இந்த விவரங்கள் எல்லாம் தெரிந்து பதறிய ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸையும் துணைக்கு அழைத்துக் கொண்டு போய் கவர்னரைச் சந்தித்து முறையிட்டதாகச் சொல்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in