தங்கமணியைச் சுற்றும் உளவுத் துறை!

தங்கமணியைச் சுற்றும் உளவுத் துறை!

அதிமுக ஆட்சியில் அதிகாரமையங்களாக இருந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், மின் துறை அமைச்சர் தங்கமணியும் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனாலும் திமுக அரசு அவர்களை விட்டபாடில்லை. தங்கமணியின் சொத்து விவரங்களை ரகசியமாக விசாரிக்கத் தொடங்கியிருக்கிறது உளவுத் துறை. ஆனாலும் இதுவரை சத்தான ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லையாம். இதனிடையே, “தமிழகத்துக்குள் தேடினால் ஏதும் சிக்காது. பெங்களூரு பக்கம் போய்ப் பாருங்க ஏதாவது சிக்கலாம்” என்று உளவுத் துறையினரின் காதில் சிலர் ஓதினார்களாம். இதையடுத்து விசாரணைக்காக ஒரு டீம் பெங்களூரு பக்கமும் போயிருப்பதாகச் சொல்கிறார்கள். “வேலுமணியின் ஊழல்கள் வெளிப்படையானது. தங்கமணியின் ஊழல்கள் வெளியே தெரியாதது; அதைக் கண்டுபிடிப்பது கடினம்” என்று தேர்தல் பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் முழங்கியது நிஜம் தான் போலிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in