
மச்சானுக்கு மாற்றல் கிடைச்சிருச்சுன்னு தெரிஞ்சதும் அம்மிணிக்கு ஒரே வருத்தம். “எனக்கு ஒண்ணுன்னா... ஒடம்பொறப்புன்னு ஓடி வருவியே”ன்னு அழுதாங்க . “அப்ப... இனிமே வர மாட்டாரா”ன்னு பாதி தெம்பா கேட்டேன். ஸ்பீக்கர்ல போடவும் மச்சான் குரல் கேட்டுச்சு. “ஃப்ளைட்டை புடிச்சு ஒங்க வீட்டு மாடில வந்து எறங்குவேன்”னு பாசமலரின் குரல் கேட்டுச்சு.
அம்மிணிட்ட “உன் ஒதவி தேவை”ன்னு மச்சான் சொன்னாரு. “சொல்லு. உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறேன்”னு அம்மிணியும் அஞ்சாறு பிராமிஸோட ரெடி ஆகவும் மச்சான் சொன்னாரு. “பேக்கிங் செய்யணும். அவரை அனுப்பி வச்சா நல்லா இருக்கும். நல்லா நீட்டா செய்வாரு”ன்னு. அவரு குடி இருந்தது வாடகை வீடு. ஓனர்ட்ட தகவல் சொல்லிட்டாராம்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.