
அன்று காலை பணி நிமித்தமாகப் பறந்துகொண்டிருந்தபோது, “ஏம்பா இந்த ஆந்தைக்கெல்லாம் பகல்ல கண்ணு தெரியாதுன்னு வடிவேலு ஒரு காமெடியில சொல்றாரே, அது உனக்குத் தெரியுமா?” என்று திடீரென கேட்டது பறக்கும் பைக்.
திடுக்கிட்ட பாச்சா, “தெரியாதுப்பா” என்றான் ஒரே வார்த்தையில். “ஆந்தைக்குப் பகல்ல கண்ணு தெரியாதா... இல்லை இந்தக் கேள்விக்கு உனக்குப் பதில் தெரியாதா?” என்று அடுத்த கேள்வியைப் போட்டது பைக். ‘பதில் தெரியலைன்னா பரவால்ல... நமக்குத்தான் கேள்வியே தெரியாதே’ என்று வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல வருத்தப்பட்ட பாச்சாவால், எல்லா கேள்விகளுக்கும் சளைக்காமல் ‘தெரியாது’ என்று பதிலளித்த ஓபிஎஸ்ஸின் வலியை உணர்ந்துகொள்ள முடிந்தது. எனவே, இந்த வார(மு)ம் ‘இருபதாயிரம்’ புகழ் அண்ணாமலையை முதலில் பேட்டியெடுக்க நினைத்திருந்தவன், முடிவை மாற்றிக்கொண்டு ஓபிஎஸ் வீட்டில் தரையிறங்கினான்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.