அரசியலுக்கு வந்த அணில்!

அரசியலுக்கு வந்த அணில்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே மின்வெட்டு பிரச்சினை சர்ச்சையாகி வருகிறது. இதுகுறித்து திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதங்களும் நடந்து வருகின்றன.  “அணில்களும் மின் தடைக்கு முக்கிய காரணம்” என்கிறார் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. அதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அதிமுக ஆட்சியில் வெளிநாடு போயிருந்த அணில்கள் எல்லாம் திமுக ஆட்சியில் நாடு திரும்பியுள்ளன” எனக் கிண்டல் செய்கிறார். தன்னைவிட பெரிய விஞ்ஞானி செந்தில் பாலாஜி என்கிறார், தெர்மோகோல் விஞ்ஞானி செல்லூர் ராஜு. “தமிழகம் மகத்தான விஞ்ஞானிகளிடம் மாட்டிக்கொண்டு முழிக்கிறது” என நெட்டிசன்கள் கிண்டலடிக்கிறார்கள். இதனால் கடுப்பான செந்தில்பாலாஜி, அதிமுக ஆட்சியில் மின் துறை எப்படி இருந்தது என்பது குறித்த அதிரடித் தகவல்களை வெளியிட்டு, அதிமுகவை கலங்கடித்து வருகிறார்.

திமுகவையும் மின்வெட்டையும் பிரிக்க முடியாது. - நத்தம் விசுவநாதன்

மின்வெட்டும், அணிலும் போலவா!- அமுது

******

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in