யாரோ ஷமூக விரோதிகள் வந்திருக்காங்க..!- பாச்சாவைப் பார்த்து பதறிய பாட்ஷா

யாரோ ஷமூக விரோதிகள் வந்திருக்காங்க..!- பாச்சாவைப் பார்த்து பதறிய பாட்ஷா

சானா
readers@kamadenu.in

கரோனா களேபரத்துக்கு நடுவே கும்பமேளா கூட்டத்தில் மாட்டிக்கொண்டவனைப் போல காலங்கார்த்தாலேயே கலவரத் தோற்றத்துடன் உட்கார்ந்திருந்தான் பாச்சா. எதற்காகவோ வெளியில் சென்றுவிட்டு அறைக்குள் நுழைந்த பைக், பாச்சாவின் நிலையைப் பார்த்ததும் ஏகத்துக்கும் பதறியது.

“என்னய்யா, 8.45 உரையை இன்னொருக்கா கேட்டுட்டியா? ஏன் இப்படி இடிவிழுந்த மாதிரி உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டு பைக் உலுக்கியதும், தன்னுணர்வு பெற்றவனாகத் தலையை உலுக்கிக்கொண்ட பாச்சா, “ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க அறிஞர் கங்கனா ரணாவத் சொன்ன யோசனையைப் படிச்சுட்டேன்ப்பா. அம்மணி சொன்ன மாதிரி செடியை நட்டுவச்சு அது வளர்ந்து மரமாகி ஆக்ஸிஜன் தர்றதுக்குள்ள நாமளே ஆவியாகி ஆக்ஸிஜன்ல கலந்துடுவோம்லன்னு தோணுச்சு. அதான் தலை சுத்தி தரையில உட்கார்ந்துட்டேன்” என்றான்.

“இந்தியாவே மூச்சுவிட திணறிட்டு இருக்கு. இதுல இந்த யோசனையை எல்லாம் படிச்சு முட்டுச்சந்துல மாட்டிக்கிட்ட மூஞ்சுறு மாதிரி முழிக்கணுமா?” என்று பரிதாபத்துக்கு நடுவே பகடியைக் கலந்து அடித்தது பைக்.
ஒருவழியாக இருவரும் அன்றைய பணிகளுக்கு ஆயத்தமானார்கள். பட்டியலை எடுத்துப் படித்த பைக், “முதலாமவர் ஸ்டாலின்” என்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in