பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

திருச்சி

காவிரி பாலத்தில் இரண்டு பிச்சைக்காரர்கள்...
“என்ன ஒரே யோசனையில இருக்கே?”
“பேசாம கைலாசம் போகலாம்னு இருக்கேன்.”
"இமயமலைக்கா... என்னய்யா திடீர்னு?”
“அட… நான் சொன்னது நித்தியானந்தாவோட கைலாசாய்யா. அங்கே காசே தங்க நாணயம்தான். பிச்சையெடுத்தே கோடீஸ்வரன் ஆகிடலாம் பாரு!”
“அடப்பாவி, இந்த விஷயம் தெரிஞ்சா இலவச விசா இல்லைன்னு சொல்லிடப் போறாரு வில்லங்க சாமியாரு.”
(இருவரும் சிரிக்கிறார்கள்)
- சிவம், திருச்சி.

திருவெறும்பூர்

டீக்கடையில் இருவர்...
“இந்தக் கரோனா கொடுமை எப்பத்தான் முடியுமோ?”
“என் முன்னாடி கரோனாவைத் திட்டாதே...எனக்குக் கெட்ட கோபம் வந்திடும்!”
“நீ ஏண்டா இதுக்குப் போய் டென்ஷன் ஆகிறே?"
“பின்னே? கவர்மென்டாலேகூட மாத்த முடியாத வரதட்சணை, வீண் கல்யாணச் செலவுகளைக் கரோனா மாத்திக் காட்டிடுச்சே...”
“என்னடா புதுசு புதுசா கெளப்பி விடுறீங்க. விட்டா கரோனா பேர்ல கட்சி ஆரம்பிச்சிடுவே போல?”
- தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in