பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

சிங்காநல்லூர்

டீக்கடை ஒன்றில் நண்பர்கள் இருவர்...
``மாப்ள...எப்பவும் டீக்கடைக்கு தனியா வருவே இன்னிக்கு பத்துப் பேர் புடை சூழ வந்திருக்கே!''
``மச்சி... எல்லாம் காரணமாத்தான், அடுத்த வாரம் என் மச்சினிச்சி கல்யாணம் வருது... அதுக்கு பத்துப் பேர் சப்போர்ட் வேணுமில்ல... அதுக்குதான்!''
``அடேங்கப்பா... மகாராஷ்ட்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க ஆள் பிடிக்கிற மாதிரி, நீ கல்யாண வேலைக்கு ஆள் பிடிக்கிறியாக்கும்?''
கோயம்புத்தூர், டி,ஜெய்சிங்

தஞ்சாவூர்

திருச்சி செல்லும் பேருந்தில்...
``சார்... என் காலை ரொம்ப நேரமா மிதிச்சிட்டு இருக்கீங்க நீங்க!''
``ஸாரி சார்... தெரியல எனக்கு!''
``எருமை மாட்டுத் தோலா இருந்தா, எப்படித் தெரியும்?''
``அதான் ஸாரி சொல்லிட்டேன்ல... அப்புறமும் என்ன எருமை மாடு... அது இதுன்னு!''
``அய்யய்ய... உங்க செருப்பு எருமை மாட்டுத் தோல்ல செஞ்சதா இருக்கும்னு சொல்ல வந்தேன்! கோவிச்சுக்காதீங்க சார்... கால்ல  மிதிச்சிட்டிருக்கும்போதுதான் சார் சாது போல... மற்றபடி பொங்கிடுவீங்களோ!''
தஞ்சாவூர், தே.ராஜாசிங்ஜெயக்குமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in