இன்று புதுக்கோட்டை நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை!- ரவுசு காட்டும் ரஜினி மக்கள் மன்றம்

இன்று புதுக்கோட்டை நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை!- ரவுசு காட்டும் ரஜினி மக்கள் மன்றம்

கரு.முத்து
muthu.k@kamadenu.in

ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா மாட்டாரா என அரசியல் உலகம் ஆரூடம் பார்த்துக்கொண்டிருக்க, புதுக்கோட்டை ரஜினி மக்கள் மன்றத்தினரோ, ‘இன்று புதுக்கோட்டை நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்கிற முழக்கத்தோடு அரசியல் - சமூகப் பணிகளில் மும்முரமாய் இருக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் 1,400 கிளைகளிலும் மன்றம் சார்பில் பூத் கமிட்டிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. இளைஞரணி, மகளிரணி, தொழில்நுட்பப் பிரிவு அணி என்று ஒரு அரசியல் கட்சிக்குத் தேவையான சகலப் பிரிவுகளையும் உருவாக்கியிருக்கிறார்கள். கிராமங்கள் தோறும் மன்றக்கொடிகள் பறக்கின்றன. 

மழைநீர் சேகரிப்புத் தொடங்கி, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு வரை பல்வேறு சமூகப் பணிகளிலும் மன்றத்துப் பிள்ளைகள் ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த மாதம், மன்றம் சார்பில் சுமார் 5,000 பேரைத் திரட்டி பேரணி நடத்தியும், ஒரே மாதத்திற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வழங்கியும் புதுகை மக்களைப் புருவமுயர்த்தச் செய்திருக்கிறார்கள் இவர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in