பேசிக்கிட்டாங்க...

பேசிக்கிட்டாங்க...

தஞ்சாவூர்

பெரியகோயில் நந்திக்குப் பக்கத்தில் இருவர்...
``நம்ம கோயிலுக்கு வரும்போதே இவ்வளவு கடுமையா பரிசோதனை பண்றாங்களே... அப்புறம் எப்படி இவ்வளவு சிலைகள் திருடு போவுது..?!''
``அட! அது தெரியாதா உனக்கு. இவுக கோயிலுக்குப் போகும்போது மட்டுந்தான் முழுசா 'செக்' பண்ணுவாங்க. வரும்போது பண்றதில்லையே..!''
``அட!ஆமால்ல...''
``இதுக்கு நீ ‘அடக்கடவுளே’னுதான் ரியாக்‌ஷன் கொடுக்கணும், புரியுதா?''
- அய்யாறு, ச.புகழேந்தி

பள்ளத்தூர்

பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவிகள் இருவர்...
``கூட்டமா இருக்கு. அடுத்த பஸ்ல போகலாமா..?''
``வேணாம்டி. இதுலயே போகலாம்...''
``எப்பவும் கூட்டம்னா சலிச்சுக்குவியே... அவன் இடிப்பான்.. இவன் இடிப்பான்னு புலம்புவியே... இன்னைக்கு என்ன... உன் ஆளு இதுல வர்றானா?"
``ஆமாம்டி... எனக்காக சீட்டு போட்டு கூட வச்சிருக்கானாம். வாட்ஸ் - அப்ல இப்பதான் தகவல் சொன்னான்...''
``இந்த ஹவுஸ்ஃபுல் பஸ்ல சீட் போட்டு வச்சிருந்தா டிரைவர் மடியில மட்டும்தான் இடம் இருக்கும். என்ன நம்பச் சொல்றியா... யாருடி அவன்..?''
``க்கும்... டிரைவரேதான்..!''
(இருவரும் சிரித்தபடி பஸ் ஏறுகிறார்கள்)
- திருமயம், பெ.பாண்டியன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in