
இந்திய விடுதலை இயக்கம் உச்சநிலையை அடைந்திருந்த தருணம் அது. அப்போது தமிழ் சினிமாவிலும் சுதந்திர வேட்கை வெடித்துச் சிதறியது. தேசபக்தி மிக்க கலைஞர்கள், தங்களது திரைப்படங்களில் சுதந்திர உணர்ச்சியை ஊட்டும் கதைகள், கதாபாத்திரங்கள், பாடல்களைப் பயன்படுத்தினர். காந்தியவாதியான ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரும் சிறந்த தேசபக்திக் கதையைத் தேடிக்கொண்டிருந்தார்.
அப்போது மதராஸ் ஒற்றைவாடை நாடகக் கொட்டகையில் ‘கலைவாணர்’ என்.எஸ்.கே நாடகக் குழுவினர் 'நாம் இருவர்' என்ற சமூக நாடகத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருந்தனர். அதைக் கேள்விப்பட்டு நாடகத்தைப் பார்க்கச் சென்றார் மெய்யப்பச் செட்டியார். பின்னாளில் வெற்றிகரமான இயக்குநராக மிளிர்ந்த ப.நீலகண்டனால் எழுதப்பட்ட 'தியாக உள்ளம்' என்ற நாடகம் அது. அதை என்.எஸ்.கே வாங்கி, ‘நாம் இருவர்’ எனப் புதுத் தலைப்பு சூட்டி, தனது பாணி நகைச்சுவையைக் கலந்து நடத்தி வந்தார்.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.