காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!

காலாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக் கல்வித் துறை!

பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

கரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் மற்றும் ஆண்டுத் தேர்வுகள் வழக்கத்தை விட தாமதமாக நடைபெற்றது. மேலும் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேபோல் ஜூன் மாத இறுதியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கின. அவர்களுக்கு தொடர்ச்சியாக வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், காலாண்டு தேர்வு குறித்த விவரங்களை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்து அக்டோபர் 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காகவும், காலாண்டு விடுமுறை விடப்படும். மீண்டும் அக்டோபர் 6ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in