பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் கவனத்திற்கு... அரசு தேர்வுகள் துறை இயக்குநர் முக்கிய அறிவிப்பு!

தேர்வு
தேர்வு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19-ம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசு தேர்வுகள் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார்.

தேர்வு
தேர்வு

இதுகுறித்து தமிழ்நாடு அரசு தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், " தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பொதுத்தேர்வு பிளஸ் 2 வகுப்புக்கு மார்ச் 1 முதல் 22-ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு மார்ச் 4 முதல் 25-ம் தேதியும் நடைபெறுகின்றன.

இந்தநிலையில் இத்தேர்வுகளை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் பிப்ரவரி 19 பிற்பகல் முதல் www.dge.tn. gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். மேலும், பிளஸ் 1 (அரியர்) மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு ஒரே ஹால் டிக்கெட் தரப்படும்" எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in