தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் சிறைதண்டனை... நாடாளுமன்றத்தில் புதிய மசோதா!

தேர்வு
தேர்வு

நுழைவுத்தேர்வு, பொதுத்தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க புதிய மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட், பொறியியல் நுழைவுத் தேர்வான ஜேஇஇ, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நடத்தப்படும் க்யூட் தேர்வு, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள், எஸ்எஸ்சி, ரயில்வே பணிகள் உள்ளிட்டவற்றுக்காக பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.

மக்களவை
மக்களவை

வட மாநிலங்களில் இந்தத் தேர்வுகளுக்கான வினாத்தாள் கசியும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதனால், தகுதியான மாணவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் நுழைவுத்தேர்வு பொதுத் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1 கோடி அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டத்துக்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாகும்.

இந்த மசோதாவின்படி தேர்வு வினாத்தாளை கசியவிடும் குற்றத்தைச் செய்யும் நபர்களுக்கு 3 ஆண்டு முதல் 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். மேலும், திட்டமிட்ட குற்றங்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரையும், ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கவும் புதிய மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in