சித்திரையின் முத்திரை பதிக்கும் திருவிழா... வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: விசேஷ புகைப்படங்கள்!

வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.
வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

‘கோவிந்தா. ‘கோவிந்தா’ முழக்கம் விண்ணதிர பக்தர்கள் புடைசூழ தங்கக் குதிரை வாகனத்தில், பச்சைப் பட்டு உடுத்தி மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார். அவரை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வழிபட்டனர்.

சித்திரைத் திருவிழாக கடந்த 12-ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்காக அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் கடந்த 8-ம் தேதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. இதையடுத்து மீனாட்சியம்மன் கோயிலில் கடந்த 19-ம் தேதி பட்டாபிஷேகமும், 20-ம் தேதி திக்கு விஜயமும் நடந்தன. இதன் தொடர்ச்சியாக மீனாட்சியம்மன்- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம், நேற்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றன.

சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு நேற்று முன்தினம் மாலை மதுரையை நோக்கிப் புறப்பட்டார். நேற்று காலை 6 மணி அளவில் மதுரை நகரில் உள்ள மூன்றுமாவடிக்கு அவரை பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி வரவேற்றனர்.அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. இதன்பின் மண்டகப்படிகளில் அவர் எழுந்தருளினார்.

நேற்று இரவு 10 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில்கு நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் இன்று அதிகாலை 6 மணி அளவில் மதுரை - ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் பச்சைப் பட்டு உடுத்தி கள்ளழகர் எழுந்தருளினார். அப்போது கோவிந்தா கோவிந்தா’ முழக்கம் விண்ணதிர கிளம்பியது. இந்நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் மதுரை நகர் திருவிழா கோலம் பூண்டுள்ளது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in