கும்பகோணம் மாசி மகப் பெருவிழாவையொட்டி மகாமகக் குளத்தில் நடைபெற்ற தீர்த்தவாரியின்போது ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணத்தில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஆண்டுதோறும் மாசி மக விழா நடைபெறுவது வழக்கம். மாசிமக தினமான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள், குளக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் 12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, நான்கு கரைகளிலும், குளத்திலும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். கும்பகோணம் மாசி மகப் பெருவிழா புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
படங்கள் - ஆர்.வெங்கடேஷ்