காற்றில் கலந்த 108 வீணை இசை.... விஜயதசமியை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு நிகழ்ச்சி

108 வீணை இசை வழிபாடு
108 வீணை இசை வழிபாடு

விஜயதசமியை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற 108 வீணை இசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் 15ம் தேதி துவங்கிய நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. கோயிலில் பல்வேறு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு நாளும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் விஜயதசமியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் 108 வீணை இசை வழிபாடு நடைபெற்றது.

மதுரை மீனாட்சியம்மன் கோயில்
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

இந்த வீணை இசை வழிபாட்டு நிகழ்ச்சியில் மதுரை, சென்னை, நாமக்கல், திண்டுக்கல், ஆகிய பகுதிகளில் இருந்து மாணவிகள், பேராசிரியர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர். வீணை வழிபாட்டின் போது மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாடல்கள் பாடப்பட்டன.

108 வீணை இசை வழிபாடு
108 வீணை இசை வழிபாடு

விநாயகர் பாடல் உட்பட பல்வேறு பாடல்கள் வீணை இசை வழியே இசைக்கப்பட்டன. வீணை இசை வழிபாட்டை பக்தர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள், இசை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in