‘என் பொண்டாட்டி பிரிந்து போனதுக்கு நீதான் காரணம்’: பெரியம்மாவை வெட்டிக்கொன்ற மகன்!

‘என் பொண்டாட்டி பிரிந்து போனதுக்கு நீதான் காரணம்’: பெரியம்மாவை வெட்டிக்கொன்ற மகன்!

தனது மனைவி பிரிந்து போனதற்கு பெரியம்மா தான் காரணம் எனக்கூறி அவரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த ராணுவவீரரை போலீசார் தேடி வருகின்றனர்.

கண்ணன்.
கண்ணன்.

தேனி மாவட்டம், பூதிப்புரம் அருகே உள்ளது வாழையாத்துப்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கண்ணன்(38). ராணுவவீரரான இவர் சில நாட்களுக்கு முன்பு தான் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

அப்போது அவரது மனைவி பிரிந்து போனார். இதற்கு தனது பெரியப்பா மனைவி முத்தம்மாள்(54) தான் காரணம் என கண்ணன் நினைத்தார். இதன் காரணமாக முத்தம்மாளுடன் அவர் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு வாழையாத்துப்பட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு முன் அமர்ந்து முத்தம்மாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற கண்ணன், முத்தம்மாளுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

'என் மனைவி பிரிந்து போனதற்கு நீ தான் காரணம்' எனக்கூறி அரிவாளால் முத்தம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் சம்பவ இடத்திலயே முத்தம்மாள் உயிரிழந்தார். உடனே அங்கிருந்து கண்ணன் தப்பியோடி விட்டார். தகவலறிந்த போலீஸார், முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்காக அனுப்பி வைத்தனர். தப்பியோடிய ராணுவவீரரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in