மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாய் சுட்டுக்கொலை: சிறுவன் வெறிச்செயல்!

துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு

டெல்லியில் மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்ததால் தாயை சிறுவன் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கீர்புரி பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவரை சிறுவன் சுட்டுக் கொன்றான். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களைப் பிடிக்க போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

இந்த கொடூர சம்பவம் குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், "சிறுவன் கொல்லப்பட்ட பெண்ணின் மகளுடன் பழகி வந்துள்ளான்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இதற்கு பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்த சிறுவன் அவரை கொல்வதற்கு திட்டம் தீட்டியுள்ளான். இதையடுத்து தனது இரு நண்பர்களிடம் ஆலோசனை கேட்டு, அவர்கள் கூறியதன் பேரில் துப்பாக்கி வாங்கி, இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளான்.

கொலை சம்பவத்துக்கு ஒரு நாள் முன்பு சிறுவன் தனது வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் கை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளான். இந்த ஸ்டேட்டஸ் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.

சுட்டுக் கொலை
சுட்டுக் கொலை

இது தொடர்பாக உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்றனர்.

மகளுடன் பழக எதிர்ப்பு தெரிவித்த தாயை சிறுவன் சுட்டுக்கொன்ற சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்

மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!

பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!

சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட வழக்கு... போர்ச்சுகல் நாட்டில் அன்மோல் பிஷ்னோய் பதுங்கலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in