
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே 1000 அடி மலை உச்சியில் மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மளிகைக் கடைக்காரர் 6 மாதங்களுக்கு பின் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே உள்ள வெண்குன்றம் கிராமத்தில் அமைந்துள்ள தவளகிரி மலைக்கோயிலின் படிக்கட்டு அருகே கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் பிணமாக கிடந்தது. இதைப்பார்த்த, அந்த பகுதி மக்கள் வந்தவாசி தெற்கு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சென்ற போலீஸார், அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா என்று விசாரணை நடத்தினர்.
ஆனால், இறந்த பெண்ணின் விவரம் குறித்து போலீஸாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதோடு, அந்த பெண்ணின் உடலைக் கேட்டு யாருமே வராத நிலையில், சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் என வட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டி அந்த பெண் யார் என்று வந்தவாசி போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (39) என்பவர், சீர்காழி காவல் நிலையத்தில் தனது மனைவி நித்தியாவை (34) ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் காணவில்லை என்று செப்டம்பர் 13-ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் நித்தியாவின் புகைப்படத்தை வைத்து விசாரித்தனர்.
மேலும் அந்த புகைப்படத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வந்தவாசி தெற்கு காவல் நிலையத்துக்கு நித்தியாவின் புகைப்படம் மெயிலில் வந்தது. அந்த புகைப்படமும் வெண்குன்றம் தவளகிரி மலைக்கோவிலின் படிக்கட்டில் பிணமாக மீட்கப்பட்ட பெண்ணின் புகைப்படமும் ஒன்றாக இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது நித்தியாவின் சொந்த ஊர் வந்தவாசி என்றும், அவரது தாய் சாந்தி என்பதும் தெரிய வந்தது. ஏப்ரல் மாதமே இறந்த நித்தியாவை ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை என்று கூறியதால் சந்தேகம் அடைந்த போலீஸார், அவரைப் பிடித்து விசாரிக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து போலீஸார் நித்தியாவின் தாய் சாந்தியை, செல்போன் மூலம் ஜெயராமனுடன் பேச வைத்தனர்.
அப்போது அவர் வந்தவாசிக்கு வர வேண்டும் என்று கூறினார். இதையடுத்து ஜெயராமன் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவர் பஸ்சில் இறங்கும்போது போலீஸார் அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது போலீஸார் சந்தேகப்பட்டது போல் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. நித்தியாவுக்கும் சீர்காழியில் வசித்து வந்த ஜெயராமனுக்கும் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகன் உள்ளார். ஜெயராமன் சீர்காழியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். நித்தியாவுக்கும் ஜெயராமனுக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நித்தியா அடிக்கடி வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி நித்தியா வீட்டை விட்டு வெளியே சென்றவர், அடுத்த நாளே அதாவது ஏப்ரல் 17-ம் தேதி ஜெயராமனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் வந்தவாசியில் இருக்கிறேன். தன்னை வந்து அழைத்து செல்லுமாறு நித்தியா கூறினாராம். இதையடுத்து ஜெயராமன் வந்தவாசிக்கு வந்ததும், நித்தியா அவரை அழைத்துக் கொண்டு தவளகிரி மலை கோயிலுக்குப் போயிருக்கிறார்.
அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயராமன் நித்யாவை 1000 அடி உச்சியில் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி உள்ளார். பின்னர் மனைவியைக் காணவில்லை என்று சீர்காழி போலீஸில் மூன்று மாதம் கழித்து புகார் அளித்துள்ளார் . அவர் புகார் கொடுத்த மாதம், சொன்ன விஷயமே எல்லாமே பொய்யாக இருந்தததால் சிக்கியுள்ளார். இதையடுத்து, போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
வில்வித்தை போட்டியில் கை இல்லாத இந்திய வீராங்கனை ஷீத்தல் தங்கம் வென்று சாதனை
நீட் விலக்கு மசோதா... நேரடியாக குடியரசுத் தலைவரிடமே முதல்வர் வலியுறுத்தல்!
3 அடி உயரம்... 250 கிலோ எடை... ரஜினிக்கு சிலை அமைத்து குடும்பத்துடன் வழிபடும் ரசிகர்!
5 வருடமாக படுத்தப் படுக்கையாக இருக்கும் பிரபல இயக்குநரின் மனைவி... கண்டுகொள்ளாத திரையுலகம்!
நவம்பர் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... பணிகளை முன்பே திட்டமிடுங்க!