வெல்டிங் தீ பரவி பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து... உடல் கருகி வாலிபர் உயிரிழப்பு!

பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த கார்த்தி
பட்டாசு வெடிவிபத்தில் உயிரிழந்த கார்த்தி
Updated on
1 min read

பட்டாசு தயாரிக்கும் இடத்தின் அருகே ஷெட் அமைக்கும் பணியின் போது வெல்டிங் தீ பரவி ஏற்பட்ட தீவிபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அடுத்த அத்திப்பள்ளத்தில் நீலி அம்மன் என்ற பெயரில் பட்டாசு தயாரிப்புடன் சில்லறை பட்டாசு விற்பனை கடை இயங்கி வருகிறது. இக்கடையின் உரிமையாளராக வேல்முருகன் மற்றும் அவரது சகோதரர் கார்த்தி இருந்து வருகின்றனர்.

இந்தக் கடையின் பின்புறம் பட்டாசு தயாரிக்கும் கிடங்கில் வெடிப்பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஷெட்டை சீரமைக்கும் பணிக்காக வெல்டிங் வைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இப்பணியில் விராலிமலை சேர்ந்த கார்த்தி, சிவா, முருகேசன் என்ற தொழிலாளிகள் ஈடுபட்டனர்.

விபத்து நேர்ந்த பட்டாசு கடை
விபத்து நேர்ந்த பட்டாசு கடை

அப்போது எதிர்பாராத விதமாக வெல்டிங் தீ ஜுவாலைகள் சிதறி, வெடி மருந்தில் பட்டதில், கிடங்கில் இருந்த வெடிகள் மற்றும் வெடி மருந்துகள் வெடித்து சிதறின. இதில் கிடங்கின் உள்ளிருந்த கார்த்தி (27) உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவா, முருகேசன் ஆகிய இரண்டு பேர் உடலில் ஏற்பட்ட தீக்காயங்களுடன் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள்.
தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்புத்துறை வீரர்கள்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, கார்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in