பெண் எஸ்.பி- க்கு பாலியல் தொல்லை... ராஜேஷ்தாஸ் மேல்முறையீட்டுவழக்கில் இன்று தீர்ப்பு!

ராஜேஷ் தாஸ்
ராஜேஷ் தாஸ்

பெண் எஸ்.பி க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து முன்னால் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்படுகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ்

பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த ஜூன் 16 ம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இதனை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். பலமுறை வாதாட கால அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அவரது தரப்பில் ஆஜராகி வாதாடவில்லை. அதைதொடர்ந்து நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் 5 நாட்கள் ஆஜராகி வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.

நீதிமன்றத்திற்கு வரும் ராஜேஷ்தாஸ்
நீதிமன்றத்திற்கு வரும் ராஜேஷ்தாஸ்

இந்த வழக்கு பிப் 9 ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தனது வாதத்தை முன் வைத்தார். அன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், அரசு தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில், இதன் தீர்ப்பு 12 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் ராஜேஷ்தாஸ்க்கு ஏற்கனேவே வழங்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்படலாம்  என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு செய்யப்பட்டால் அவர் இன்றே கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in