குடிபோதையால் அழிந்த குடும்பம்; கணவரைக் கொன்று எரித்த மனைவி கைது

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை
Updated on
1 min read

அசாமின் ஜோர்ஹாட் மாவட்டத்தில் குடித்துவிட்டு தினமும் தன்னைத் தாக்கி வந்த கணவரை கொன்று, தீ வைத்து எரித்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

அசாம் மாநிலம், ஜோர்ஹாட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரஹலாத் சோரன். இவர் அங்குள்ள மரியானி பகுதியின் முர்முரியா தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் பிரஹலாத், குடிபோதையில் தினமும் தனது மனைவியை தாக்கி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியை தாக்கியுள்ளார்.

கணவன் - மனைவி தகராறு
கணவன் - மனைவி தகராறு

கணவனின் குடிப்பழக்கத்துக்கு இனி விடிவு கிடையாது என்று புரிந்துகொண்ட பிரஹலாத்தின் மனைவி, ஆத்திர மிகுதியில் அவரை திருப்பித் தாக்கினார். அதில் படுகாயமடைந்த பிரஹலாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் வீட்டின் அருகே அவரது உடலை தீ வைத்து எரித்துள்ளார். இந்த கொலை சம்பவத்தில் பிரஹலாத்தின் மகனான, மைனர் சிறுவனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அறிய நேர்ந்த உள்ளூர் போலீஸார் அங்கு சென்று பாதி எரிந்த நிலையில் கிடந்த பிரஹலாத் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பிரஹலாத்தின் மனைவி, அவரது மகனான மைனர் சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.

கைது
கைது

சிறுவன் மீது, சிறார் குற்றங்கள் தொடர்புடைய சட்டப் பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜோர்ஹாட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்வேதாங்க் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in