சோகம்... விபத்தில் இறந்த முதியவர்....பதற்றத்தில் பலியான ஆட்டோ ஓட்டுநர்!

கமுதி
கமுதி
Updated on
1 min read

கமுதி அருகே ஆட்டோ மோதிய விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டி உயிரிழந்த நிலையில்,  பதற்றம் காரணமாக ஆட்டோ ஓட்டுநரும்  விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பூமாவிலங்கை கிராமத்தை சோந்தவர் ராமையா மகன் கல்யாணிதேவர் (65). இவர் நேற்று  கமுதி சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு  திரும்பச்சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ, இவரது இருசக்கர வாகனத்தின் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேராக மோதியது. இதில் கல்யாணிதேவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆட்டோ ஓட்டுநரான முதல்நாடு கிராமத்தைச் சோந்த காசிராஜன் மகன் சதீஷ்குமார் (33),  கல்யாணிதேவர் அவருக்கு தெரிந்தவர் என்பதால் இந்த விபத்து தொடா்பாக கல்யாணித்தேவா் மகன் முனியாண்டிக்கு உடனடியாக கைப்பேசியில் தகவல் தெரிவித்தார். கல்யாணிதேவர் இறந்த பதற்றத்தில்  தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு கமுதிக்கு வேகமாக ஒட்டி வந்தார்.

விபத்து
விபத்து

அப்போது, அரண்மனைமேடு அருகே அவரது ஆட்டோ நிலைகுலைந்து  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில்  சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கமுதி போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து  வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கமுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in