கேரள வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி… விருதுநகர் இளைஞரைக் கைது செய்து என்ஐஏ விசாரணை!

கேரள வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி… விருதுநகர் இளைஞரைக் கைது செய்து என்ஐஏ விசாரணை!

கேரள வனப்பகுதியில் நடைபெற்ற ஆயுதப் பயிற்சியில் பங்கேற்றதாக விருதுநகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள்.

ஆந்திரா, ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநில வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி தீவிரமாகப் போராடிவருகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக-கேரள எல்லையில் உள்ள நிலம்பூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் முகாமிட்டு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டனர். இதனையடுத்து கேரளா போலீஸார் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது மாவோயிஸ்ட்டுகளுக்கும் கேரளா போலீஸாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் அஜிதா உள்ளிட்ட பல மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து நிலம்பூர் மாவோயிஸ்ட்டுகள் பயிற்சி தொடர்பான வீடியோ பதிவுகளைக் கேரளா போலீஸார் வெளியிட்டிருந்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள் என்ற அதிரச்சித் தகவல் வெளியானது. இந்த வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ-விற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனைகளில் சந்தேகப்படும் நபர்களைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கடந்த சில தினங்களுக்கு முன் கேரள வனப்பகுதியில் ஆயுதப் பயிற்சி பெற்றதாக விருதுநகர் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஐயப்பன், அங்கிருந்து கேரளாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in