சோகம்... மாடிப்படிக்கட்டில் திடீரென மயங்கி விழுந்த செவிலியர் பலி!

பிரீத்தி
பிரீத்தி

நாமக்கலில் தனியார் மருத்துவமனையின் செவிலியர் மாடிப் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எரியோடு பாலசுப்பிரமணியன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மகள் பிரீத்தி (27). இவர் பிஎஸ்சி படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே நல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதிநேர செவிலியராக பணியாற்றி வந்தார்.

இதற்காக அவர் சுகாதார நிலையம் அருகே உள்ள வீட்டில் மாடி அறையை வாடகைக்கு எடுத்து தனியாக தங்கியிருந்தார். சமீபகாலமாக பிரீத்தி ரத்த அழுத்தம் காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையிலும் சிகிச்சையும் பெற்று வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை பால் வாங்குவதற்காக மாடிப்படிக்கட்டில் இருந்து இறங்கி வரும்போது மயக்கம் ஏற்பட்டதால் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே பிரீத்தி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற நல்லூர் போலீஸார், பிரீத்தி உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவருடைய பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். செவிலியர் இறந்தது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in