பரபரப்பு... போலீஸ் வேனில் இருந்து 3 கைதிகள் தப்பியோடும் வீடியோ வைரல்!

தப்பியோடும் கைதிகள்
தப்பியோடும் கைதிகள்

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் வேனில் இருந்து 3 கைதிகள் தப்பியோடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தப்பியோடிய கைதிகள்
தப்பியோடிய கைதிகள்

உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டத்தில் உள்ள ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரிஜேந்திரா(27) சைலேந்திரா(20), ஞானபிரசாத்(23) ஆகிய குற்றவாளிகள் உள்பட 7 பேரை போலீஸார் வேனில் செப்.19-ம் தேதி அழைத்து வந்தனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே வேனை நிறுத்தி போலீஸார் தேநீர் அருந்தியுள்ளனர். அப்போது பிரிஜேந்திரா, சைலேந்திரா, ஞானபிரசாத் ஆகியோர் அங்கிருந்து தப்பியோடும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேனுக்குள் இருந்த அவர்கள், போலீஸ் பாதுகாப்பின்றி விடப்பதை உணர்ந்து தப்பி சாலையில் ஓடுவது வீடியோவில் பதிவாகியுள்ளது.

தப்பியோடிய கைதிகள் இதுவரை யாரும் பிடிபடவில்லை. குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். கைதிகள் தப்பியதில் அலட்சியமாக இருந்ததாக 3 எஸ்.ஐக்கள் உட்பட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு அவர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த குழு ஒன்றும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைப் பிடிக்க 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் மற்றும் தலைமறைவான குற்றவாளிகள் ஓடிய மற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை குழு ஆய்வு செய்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தப்பியோடிய மூன்று குற்றவாளிகளும் ரயில் நிலையங்களில் செல்போன் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருடியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்று போலீஸார் தெரிவித்தனர். காவல் துறை பாதுகாப்பில் இருந்த 3 கைதிகள் தப்பியோடிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் மக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in