ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து 9-ம் வகுப்பு மாணவியை மிரட்டி பலாத்காரம்: கையும்,களவுமாக சிக்கிய குற்றவாளி!

பலாத்காரம்
பலாத்காரம்

ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வதாக மிரட்டி பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை பஜ்ரங் தளம் அமைப்பின் தொண்டர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீஸிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பிதார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லயக் அலி(20). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியைப் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளர். அவரைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றி அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அதைப் புகைப்படங்களாக லயக் அலி எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த ஆபாசப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடப்போவதாக லயக் அலி மிரட்டியுள்ளார். இதனால் அவருடன் பைக்கில் மாணவி சென்றுள்ளார். அவரை ஒரு வாடகை வீட்டிற்கு அழைத்துச் சென்று லயக் அலி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதையறிந்த பஜ்ரங் தளம் அமைப்பின் தொண்டர்கள் அந்த வீட்டை நேற்று சுற்றி வளைத்தனர். அத்துடன் லயக் அலியிடமிருந்து மாணவியை மீட்டனர். இதன்பின் லயக் அலியைப் பிடித்து அவர்கள் விசாரித்தனர்.

வீட்டை சுற்றி வளைத்த பஜ்ரங் தள அமைப்பினர்
வீட்டை சுற்றி வளைத்த பஜ்ரங் தள அமைப்பினர்

அப்போது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக பள்ளி மாணவியை மிரட்டி அவர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் பிதார் நகர் மகளிர் காவல் நிலையத்தில் பஜ்ரங் தளம் தொண்டர்கள் ஒப்படைந்தனர்.

இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் தாய் புகார் அளித்தார். இதன்பேரில், லயக் அலி மீது போலீஸார் போக்சோ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவியை அவர் மிரட்டி பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச புகைப்படங்களை வெளிடுவதாக கூறி பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in