சென்னையில் பயங்கரம்... தூக்கி வீசிய கார்... தூய்மைப் பணியாளர் உட்பட 2 பேர் கவலைக்கிடம்!

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

சென்னை அண்ணாநகரில் நள்ளிரவில் குடிபோதையில் இளைஞர்கள் ஓட்டி வந்த கார் மோதி, தூய்மைப் பணியாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 2 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், சென்னை அண்ணாநகரில் நள்ளிரவு 2.30 மணி அளவில் அதிவேகமாகச் சென்ற கார், சாலையோரம் நின்றிருந்தவர்கள், தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர் என 6 பேர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேரில் 2 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

காரில் இருந்த 3 பேரில் 2 பேர் தப்பி ஓடிய நிலையில், பிடிபட்டவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை நடுவே அமைக்கப்பட்டிருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, அங்கிருந்தவர்கள் மீது மோதியுள்ளது. மது போதையில் காரை இயக்கியதே விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in