சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு அச்சுறுத்தல்... திருச்சி சூர்யா பகீர் தகவல்!

திருச்சி சூர்யா
திருச்சி சூர்யா
Updated on
2 min read

"எடப்பாடி பழனிச்சாமியின் கைக்கூலியாகத்தான் சவுக்கு சங்கர் செயல்பட்டு வருகிறார். அவரது உயிருக்கு தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில்,"முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும், குற்ற பின்னணி உடையவர்களான அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எந்த ஒரு நிறுவனமும் வேலைக்கு சேர்க்க மறுப்பதாகவும், தேவர் ஜெயந்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சவுக்கு சங்கர் பேசி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுயுள்ளார். இது முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், சவுக்கு சங்கர் மீதும், அவரது யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

சவுக்கு சங்கர் மீது திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார்
சவுக்கு சங்கர் மீது திருச்சி எஸ்பி அலுவலகத்தில் புகார் HR Ferncrystal

மனு அளித்துவிட்டு வெளியே வந்த சூர்யா சிவா செய்தியாளர்களிடம் பேசும்போது, "பெண் காவலர்களையும் பெண்களையும் இழிவாக பேசியதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 35 புகார்கள் காவல்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறைத்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் நேர்மையான அதிகாரி. ஆனால் சவுக்கு சங்கர் பல இடங்களில் பகையை சம்பாதித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியின் கைக்கூலியாக செயல்பட்டு விமர்சனங்களை பெற்றுள்ளார். எடப்பாடி பழனிசாமி குறித்து எத்தனை வீடியோக்களை பதிவு செய்து வைத்துள்ளார் என்பது கூட தெரியாது.

சவுக்கு சங்கர்
சவுக்கு சங்கர்

கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமி உடன் நீண்ட நாள் சவுக்கு சங்கர் பயணித்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கனகராஜ் மரணத்தில் காரை ஓட்டி வந்த மல்லிகா நல்லுசாமி சவுக்கு சங்கரின் நண்பர், இந்த வழக்கு விசாரணை தொடர்பாக பலவற்றை ஆஃப் செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி உடன் நீண்ட நாள் பயணித்து இருப்பதாலும், எடப்பாடி பழனிசாமி குறித்த ரகசியங்களை அறிந்திருப்பதாலும் சவுக்கு சங்கரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

திருத்தணி முருகன் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திடீர் சாமி தரிசனம்... அடுத்த படத்துக்கான பணிகள் துவக்கமா?

வீடியோ காலில் எதற்கு பேசுற? மனைவியைக் கொலை செய்து புதைத்த கணவன்!

வங்கக்கடலில் 'ரெமல்' புயல்... 26ம் தேதி கரையைக் கடக்கும் என கணிப்பு!

அதிர்ச்சி வீடியோ... மருத்துவமனைக்குள் பாய்ந்த ஜீப்... அவசர சிகிச்சை பிரிவு வரை ஓட்டிச் சென்ற போலீஸார்!

மெக்சிகோவில் பிரச்சாரத்தில் மேடை சரிந்து விபத்து: 5 பேர் பலி; 50 பேர் படுகாயம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in