கழன்று ஓடிய டயர்... உயிர் தப்பிய பள்ளி குழந்தைகள்... திருப்பூர் அதிர்ச்சி

திருப்பூரில் பள்ளி வேனில் இருந்து கழன்று ஓடிய டயர்
திருப்பூரில் பள்ளி வேனில் இருந்து கழன்று ஓடிய டயர்

திருப்பூரில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் டயர் கழன்று சாலையில் ஓடியது. இதில் அந்தப் பேருந்தில் பயணித்த பள்ளிக் குழந்தைகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்தச் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் - உடுமலை சாலையிலிருந்து பொள்ளாச்சி சாலையில் உள்ள பொண்ணாபுரம் பகுதியை நோக்கி, பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு விவேகம் மேல்நிலைப் பள்ளி பள்ளி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, வேனின் டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இதில் வேனின் ஒரு பகுதி சரிந்தது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. நல்லவேளையாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

காயம் அடைந்த குழந்தைகளுக்கு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பதற்றத்துடன் வந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளைப் பார்த்த பின்னர்தான் நிம்மதி அடைந்தனர். பின்னர், தங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in