வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை!

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து கல்லூரி மாணவர் தற்கொலை!

வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவர் பலி
கல்லூரி மாணவர் பலி

பங்களாபுதூர் அருகே உள்ள என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்த வெள்ளியங்கிரி மகன் தயானந்தன் (20). இவர் கோபியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 10 வருடங்களாக அங்குள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்து தயானந்தன் படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு தயானந்தன் தங்கி இருக்கும் வீட்டின் உறவினரான யுவராஜ், வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பார்த்தபோது அதில் தயானந்தனின் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக காண்பித்துள்ளது. இதைப் பார்த்துவிட்டு பதறிப் போன  யுவராஜ்,  தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு,  ஓடிப்போய் தயானந்தன் இருந்த அறையின் கதவை தட்டியுள்ளார்.

அறைக்கதவு தாழ்ப்பாள் போட்டு இருந்ததால் ஜன்னல் வழியே பார்த்தபோது தயானந்தன் பேன் கொக்கியில் கயிற்றில் தூக்குமாட்டி தொங்கிக் கொண்டிருந்ததை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கதவின் தாழ்ப்பாளை உடைத்து தயானந்தனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், தயானந்தன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பங்களாப்புதூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸாரின் விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்ததாக தெரிகிறது. விரக்தியில் இருந்து வந்த தயானந்தன் வாழ பிடிக்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in