வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்: 7 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்!

ஸ்பெயின் சுற்றுலாப் பயணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
ஸ்பெயின் சுற்றுலாப் பயணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்த ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதிகள் இருவர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்திருந்தனர். தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் குறுமுகத் என்ற பகுதிக்கு இருவரும் சுற்றுலா சென்றனர். அங்கு இரவு தற்காலிக டென்ட் அமைத்து இருவரும் தங்கியிருந்தனர். காலையில் அவர்கள் இருசக்கர வாகனம் மூலமாக பீகார் சென்று அங்கிருந்து நேபாள் செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

ஜார்கண்ட் போலீஸார்
ஜார்கண்ட் போலீஸார்

இந்நிலையில் நள்ளிரவில் இருவரும் தங்கி இருந்த இடத்திற்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கணவரை அடித்து காயப்படுத்தி விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இது தொடர்பாக அந்த சுற்றுலா பயணி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், ஸ்பெயின் நாட்டு சுற்றுலா பயணிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது.

ஸ்பெயின் சுற்றுலாப் பயணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்
ஸ்பெயின் சுற்றுலாப் பயணியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்

இதனிடையே இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், மீதமிருக்கும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜார்கண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது மாநிலத்தில் நிலவும் மோசமான சட்ட ஒழுங்கு நிலவரம் குறித்து அவர் கவலை தெரிவித்திருந்த நிலையில், இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இப்படியெல்லாம் வாக்கு சேகரிக்கக்கூடாது... அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

பெங்களூரு ஓட்டலில் டைமர் வெடிகுண்டு வெடிப்பில் தீவிரவாத சதியா?... என்ஐஏ தீவிர விசாரணை!

கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்... சு.வெங்கடேசன் எம்.பி கொந்தளிப்பு!

4+1 வேண்டும்... பிரேமலதா பிடிவாதம்: அதிமுக- தேமுதிக கூட்டணி நிலவரம்!

சரசரவென குறைந்த பூண்டு விலை...இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in