கூர்மையான ஆயுதத்தால் இளைஞர் மீது 4 பேர் கொடூரமாக தாக்குதல்... 2 பேர் கைது!

சீர்காழி இளைஞர்கள் மீது தாக்குதல்
சீர்காழி இளைஞர்கள் மீது தாக்குதல்

சீர்காழி அருகே முன் விரோதம் காரணமாக ஒருவரை, நான்கு பேர் சேர்ந்து கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வடகால் கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் நரேஷ். அதே கிராமத்தில் உள்ள ஆற்றங்கரை தெருவை சேர்ந்த மணிகண்டன், மணிமாறன், விக்னேஷ், நேசமணி. அந்த ஊரியல் கடந்த கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நடந்த கோயில் திருவிழாவின் போது இந்த இருதரப்புக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

சீர்காழி இளைஞர்கள் மீது தாக்குதல்
சீர்காழி இளைஞர்கள் மீது தாக்குதல்

அதன் பிறகு ஊர்காரர்கள் இரு தரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், கடந்த 9ம் தேதி வடகால் கடைவீதிக்கு வந்த நரேஷை, மணிகண்டன், ஜெகதீஷ், மணிமாறன் உள்ளிட்ட நான்கு நபர்களும் சேர்ந்து கூர்மையான ஆயுதங்களை கொண்டு பலமாக தாக்கி அடித்துள்ளனர். இதைப்பார்த்த நரேஷின் நண்பர்கள் இருவர் தடுக்க வந்த போது அவர்களையும் அந்த கும்பல் தாக்கியது.

இந்த தாக்குதலின் போது படுகாயம் அடைந்த நரேஷ், ராஜா, பாக்கியராஜ் ஆகியோர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மற்றொரு தரப்பைச் சேர்ந்த மணிகண்டன் படுகாயமடைந்த நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு தரப்பினர் இடைய முன்விரோதம் காரணமாக தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புதுப்பட்டினம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் மணிமாறனை புதுப்பட்டணம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in