'ஜெய் ஸ்ரீ ராம்' முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல் நடத்திய கும்பல்...அதிர்ச்சியூட்டும் வீடியோ!

பள்ளி மீது தாக்குதல் நடத்தும்  கும்பல்
பள்ளி மீது தாக்குதல் நடத்தும் கும்பல்

தெலங்கானாவில் காவி உடை அணிந்து வந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

பள்ளி மீது தாக்குதல் நடத்தும்  கும்பல்
பள்ளி மீது தாக்குதல் நடத்தும் கும்பல்

இந்த நிலையில் காவி உடை அணிந்து வந்த 50-க்கும் மேற்பட்டோர் அன்னை தெரசா உயர் நிலைப்பள்ளிக்குள் இன்று நுழைந்தனர். அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர்.

ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டவாறே அவர்கள், அந்த பள்ளி மீது தாக்குதல் நடத்தும் வீடியோ சமூகவலைதளங்களில் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் வந்திருந்தனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப், அந்த மாணவர்களிடம விசாரணை நடத்தினர். அப்போது அந்த மாணவர்கள் 21 நாட்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாணவர்கள் தங்கள் பெற்றோரை அழைத்து வருமாறு பள்ளி முதல்வர் ஜெய்மன் ஜோசப் கூறியுள்ளார். இதன் காரணமாக பள்ளி மீது காவி உடை அணிந்த கும்பல் தாக்குதல் நடத்தியது தெரிய வந்தது.

இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகையைத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் மீது அன்னை தெரசா பள்ளி முதல்வர் உள்பட கல்வி நிறுவன ஊழியர்கள் இருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in