மதுரை ரயில் நிலையத்தில் பரபரப்பு... 6 மாத பெண் குழந்தை கடத்தல்!

மதுரை ரயில் நிலையம்
மதுரை ரயில் நிலையம்

மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன் உறங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தையுடைய தாயின் அருகே படுத்திருந்த மர்ம பெண், குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி அருகேயுள்ள டோனாவூர் கிராமத்தை சேர்ந்த சுந்தரி (39) என்ற பெண் தனது பிள்ளைகளுடன் மதுரை ரயில்வே நிலையத்தின் வெளிப்புற வளாகத்தில் உறங்கிகொண்டிருந்தார். அப்போது மர்ம பெண் ஒருவர் தான் சித்திரை திருவிழாவிற்கு வந்துள்ளதாக கூறி அவர்களின் அருகில் உறங்கியுள்ளார்.

குழந்தை கடத்தல்
குழந்தை கடத்தல்

இந்நிலையில் காலையில் எழுந்து பார்த்த போது 6 மாத பெண் குழந்தையை காணவில்லை. மேலும் அருகில் படுத்திருந்த 33 வயது பெண்ணையும் காணவில்லை. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் தாய் என்ன செய்வதென்று தெரியாமல் அழுது கொண்டே அந்த இடம் முழுவதும் தேடி உள்ளார். தொடர்ந்து சுந்தரியின் 6 மாத குழந்தையான சக்திபிரியாவை காணவில்லை என கூறி ரயில்வே போலீஸ் மற்றும் திலகர்திடல் காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

மதுரையில் அதிகளவில் ஆட்கள் நடமாட்டம் உள்ள ரயில்வே நிலையத்தில் படுத்து உறங்கிய குழந்தை கடத்தப்பட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தரியின் அருகில் படுத்துக்கொண்டிருந்த மர்ம நபர் குழந்தையை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in